Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சீமான் குறித்து பேசி தமது தரத்தை தாமே குறைத்துக்கொள்ள விரும்பவில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் அண்மைக்காலமாக தனிநபர்களை தாக்கி பேசுவதாக கூறினார்.
மேலும், ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமானின் கருத்து பற்றி குறிப்பிட்ட துரைமுருகன், பொதுவாக தலைவர்கள் இறந்த பிறகு அவர்களை பற்றி அவதூறாக யாரும் பேசமாட்டார்கள் என்றும், அப்படி பேசுபவர்கள் தமிழக அரசியலில் இருப்பது வெட்கக் கேடு என்றும் கூறினார்.